நவம்பர் மாதம் ஊருக்கு வந்த போது எங்கு திரும்பினாலும் அழகிரி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பேனர்கள் மதுரையை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தன. அவர் மகன் கல்யாணம் வேறு அச்சமயம் இருந்ததால் மதுரையே பிதுங்கி விட்டது. என் தம்பி சொன்னான்.
" அடுத்த வருஷம் அழகருக்கு பதிலா அழகிரிதான் அண்ணே ஆத்துல இறங்க போறாரு "
நான் கேட்டேன்
ஆத்துல இறங்க போறாரா இல்ல ஆட்சிய விட்டு இறங்க போறாரான்னு.
பேப்பர் வாசித்ததில் அழகிரி ஆற்றில் இறங்கவில்லை என்று உறுதியாகிவிட்டது. ஆட்சியைப்பற்றி தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்...