Sunday, December 27, 2009

கிறிஸ்துமஸ்

கடந்த நான்கு வருடங்களில் இந்த வருடம் கிறிஸ்துமசுக்கு ஊருக்கு வர முடியாதது மிக மிக வருத்தமாக இருந்தது. நானும் என் மனைவியும் மட்டும் சர்ச்சுக்கு போய்விட்டு வந்தோம். டின்னருக்கு நண்பர்கள் வீட்டுக்கு சென்றோம் .
வழக்கம் போல ஊருக்கு போன் போட்டு அவர்கள் எல்லாம் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டுகொண்டோம். இந்த மாதிரி நேரங்களில்தான் அயல்நாடுகளில் பணிபுரிவதில் உள்ள வேதனையும் , நம்முடைய இயலாமையும் நரக வேதனையை தரும். என் மனைவி அழுதே விட்டார்.
அடுத்த ஆண்டு எப்படியும் போய்விடலாம் என்று பிளான் பண்ணியுள்ளேன்.
பாப்போம் ..என்ன நடக்கப் போகுதென்று ....

மற்றபடி எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
2010 எல்லோருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டுவோம் .

No comments:

Post a Comment