Wednesday, December 23, 2009

விஜய் வேட்டையாடுகிறாரா அல்லது ஆடப்படுகிறாரா?

காத்திருந்து காத்திருந்து கடைசியில் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகி ,நான் கேபிள் அண்ணா விமர்சனம் படித்து பின்னூட்டமும் போட்டு விட்டேன் . நான் எதிர்பார்த்த மாதிரியே ஆகிவிட்டது. அநேகமாக வரும் பொங்கல் தினம் டிவி சேனல்களில் பட்டிமன்ற தலைப்பு இதுவாகத்தான் இருக்கும். நடிகர் விஜய் இனியாவது திருந்துவாரா? மாட்டாரா ?


மெல்போர்னில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அல்லது முன்பே எனக்கு sms அல்லது மெயில் வந்துவிடும் . அப்படித்தான் சிவாஜி , ஆதவன் எல்லாம் போனோம் . என் நல்ல காலம் இந்தமுறை எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. 50 டாலர் மிச்சம் .( மனைவி திட்டிளிருந்தும் தப்பித்தேன் )


விஜய் படங்களில் நான் கடைசியாக முழு படமும் பார்த்தது கில்லி தான் .முதல் இரண்டு சீனோடு ATM முடித்து விட்டேன். பாதாள சாக்கடையிலிருந்து விஜய் தாவி வருவாரே , அதோடு குருவி முடிந்தது . வில்லு ஞாபகம் இல்லை , இரண்டோ அல்லது மூன்றோ சீன்தான் . வேட்டைக்காரன் பார்க்க போவது இல்லை என்று தீர்மானித்து விட்டேன்.
இவர் படத்தின் கதையை கேட்பாரா இல்லை பஞ்ச் டயலாக் மற்றும் பாடல்களை மட்டும் கேட்பாரா என விளங்கவில்லை .ஒரு பெரிய மாஸ் ஹீரோ இப்படியா வரிசையாக தோல்வி படங்களை கொடுப்பது. (நான் தோல்வி என்பது திரைகதையில் . வசூலில் வேண்டுமானால் வெற்றி என கொள்ளலாம் ) இவரே முழு காரணம் இல்லையானாலும் கணிசமான அளவு இவர்தான் காரணம். அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானதா என்று தெரியவில்லை .பொறுத்திருந்து பார்ப்போம் .

Friday, December 4, 2009

ஆதவன் கதை

மதுரையில் என் தம்பிகள் ஆதவன் பார்க்க போனார்கள் என்று நானும் இங்கு மெல்போர்னில் தமிழ் படம் பாக்க போயிருந்தேன். ( பதிவுகள் பார்த்து விட்டு படம் பார்ப்பதுதான் வழக்கம் ... இந்த முறை அவசரப்பட்டு விட்டேன் . என்னை அந்த கோடம்பாக்கம் ஸ்லிப்பர்கொண்டு விளாச வேண்டும் ) இந்த முறை சிவாஜி படம் போல் கூட்டம் ஒன்றும் இல்லை .சண்டை காட்சிகள் மேலும் வெறுப்பை ஏத்தியது .வேற என்ன செய்ய ...40 டாலர் திக்கெட்டும் ( I mean ticket) பாப்கான் 20 dollor அவுட் . வேட்டைக்காரன் டிசம்பர் மாசம் வருகிறது என்றார்கள் .போதும்டா சாமி .... நான் கேபிள் அண்ணாவைத்தான் விமர்சனத்துக்கு நம்பி இருக்கிறேன். இந்த வருடம் முழுமைக்கும் மொத்தமாக 5 அல்லது அதற்கும் குறைவாகதான் தமிழ் படங்கள் பார்த்திருப்பேன் என்பது வேறு விஷயம் .

கார்கியாரும் ஆலிவ் ஆயிலும்

நேற்று கார்க்கியாரின் பக்கங்களை வாசிக்கும் போது ஆலிவ் ஆயிலின் சிறப்பை குறித்து எழுதி இருந்தார் . அது உண்மை என்றே எனக்கும் தோன்றுகிறது . கடந்த மூன்று வருடங்களாக ஆலிவ் தான் பயன்படுத்துகிறேன் .என்னுடைய blood cholesteral லெவல் நார்மல் ஆகி விட்டது .( முன்னால் எவ்வளவு இருந்தது என்பது வேறு மேட்டர் .)இங்கே 70 வயதில் யாரும் இறந்தால் ரொம்ப சின்ன வயசில புட்டுகிட்டார் என்பார்கள் . எல்லோரும் ஆலிவ் ஆயில் வாங்குவதை ஷாப்பிங் செல்லுன் போதும் பார்த்து உள்ளேன் specially migrants from european countries. ஆனால் 35 வயசில் எனக்கு வேற எதாவது வியாதி வந்தால் .... விதியை வெல்ல யாரால் முடியும் .