Monday, December 28, 2009

2009 - திரும்பிப் பார்க்கிறேன்

  • 2009 - திரும்பிப் பார்க்கிறேன்
    ( அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ... நீ முன்னாடி பார்த்தாலே போதும் என்பவர்களுக்கு அதை புத்தாண்டு வாழ்த்துக்களாக எடுத்துக் கொள்வேன் . இந்த ப்ளோக்கை எப்படியாவது எழுதிப்புடனும்னு லுங்கி கட்டி( கங்கணம் கட்டி ரொம்ப நாளாச்சுல்ல ...அதான் ) இறங்கியிருக்கேன்.


  • ஜனவரி & மே மாதங்களில் இந்தியா வந்தேன் . இது ஒரு பெரிய விஷயமாஎன்றால் ஆம் ... ஜனவரியில் கிறிஸ்துமஸ் & நியூ யிரையொட்டி முதல் முறையும் பின்பு மகனின் முதல் பிறந்த நாளுக்காக மே மாதமும்.....வருடம் ஒரு முறைதான் இந்தியா போக முடியும் என மனைவியிடம் சொன்ன நானே இந்த ஒரு முறை மட்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன்.



  • மே மாதம் வந்தசமயம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது ரொம்ப பதறி விட்டேன் . மனைவியும் குடும்பத்தாரும்தான் ரொம்ப உறுதுணையாக இருந்தார்கள்.( விஷயம் நடந்தபோது தம்பிகள் உடனில்லையாதலால் நான்தான் ஓவராக பயந்துவிட்டேன்)



  • சின்னதம்பிக்கு (பிரபுவுக்கு அல்ல ) ஒரு பல்சர் 150 வாங்கிக் கொடுத்தேன்.


  • புதிதாக ஒரு லோன் எடுத்துள்ளேன் ( கிழிஞ்சிது ...போ.. இதையெல்லாம் திரும்பிப் பார்க்காமல் அடைக்கப் பாருடா ஆனியன் என்று சொல்வது காதில் தேனாக பாயுது..)



  • கேபிள் சங்கர் , பரிசல் , லக்கிலுக்,ஹாலிவூட் பாலா ஆகியோரை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தும், கார்க்கி, அதிஷா, பட்டர்பிளை, நரசிம், அப்துல்லா ஆகியோரை இடையில் இருந்தும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன் . இன்னும் சில வலைப்பதிவர்களையும் இடையிடையே வாசிக்கிறேன்.


  • ஒரு ப்ளோக்கை தொடங்கி மெதுவாக சிறிய பத்திகளாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் .


  • காரை மாற்றி விட்டேன்


  • தற்காலிக வேலையை விட்டுவிட்டு நிரந்தர வேலைக்கு மாறியுள்ளேன் ( அதுவும் துணை மேலாளராக ...தலையில கொட்டுங்க பெருமையடிக்கிராயா ராஸ்கல் . எவ்வளவு கஷ்ட்டப்பட்டு எழுதினாலும் 'ர' தப்பாயுடுச்சே ...)


  • 100 - 200 ஆங்கில படங்களும் 5-10 தமிழ் படங்களும் பார்த்திருப்பேன். வலைப்பதிவுலக நண்பர்களின் விமர்சனங்களைப் படித்துவிட்டு நல்லதாக மட்டுமே தமிழ் படங்களை பார்க்கிறேன்( குறிப்பாக கேபிள் அண்ணனுக்கு நன்றி..இவர் விமர்சனம் படிக்காமல் படம் பார்த்து நேரத்தை வீணடித்து மன சஞ்சலப்படுவதில்லை)
  • புது தமிழ் நண்பர்கள் சிலர் மெல்போனில் கிடைத்துள்ளனர்.
  • வேற ஒன்னும் இல்லீங்க ... இருந்தால் 2010 இல் திரும்பிப் பார்த்துக்கிறேன். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
















































Sunday, December 27, 2009

கிறிஸ்துமஸ்

கடந்த நான்கு வருடங்களில் இந்த வருடம் கிறிஸ்துமசுக்கு ஊருக்கு வர முடியாதது மிக மிக வருத்தமாக இருந்தது. நானும் என் மனைவியும் மட்டும் சர்ச்சுக்கு போய்விட்டு வந்தோம். டின்னருக்கு நண்பர்கள் வீட்டுக்கு சென்றோம் .
வழக்கம் போல ஊருக்கு போன் போட்டு அவர்கள் எல்லாம் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டுகொண்டோம். இந்த மாதிரி நேரங்களில்தான் அயல்நாடுகளில் பணிபுரிவதில் உள்ள வேதனையும் , நம்முடைய இயலாமையும் நரக வேதனையை தரும். என் மனைவி அழுதே விட்டார்.
அடுத்த ஆண்டு எப்படியும் போய்விடலாம் என்று பிளான் பண்ணியுள்ளேன்.
பாப்போம் ..என்ன நடக்கப் போகுதென்று ....

மற்றபடி எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
2010 எல்லோருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டுவோம் .

Wednesday, December 23, 2009

விஜய் வேட்டையாடுகிறாரா அல்லது ஆடப்படுகிறாரா?

காத்திருந்து காத்திருந்து கடைசியில் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகி ,நான் கேபிள் அண்ணா விமர்சனம் படித்து பின்னூட்டமும் போட்டு விட்டேன் . நான் எதிர்பார்த்த மாதிரியே ஆகிவிட்டது. அநேகமாக வரும் பொங்கல் தினம் டிவி சேனல்களில் பட்டிமன்ற தலைப்பு இதுவாகத்தான் இருக்கும். நடிகர் விஜய் இனியாவது திருந்துவாரா? மாட்டாரா ?


மெல்போர்னில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அல்லது முன்பே எனக்கு sms அல்லது மெயில் வந்துவிடும் . அப்படித்தான் சிவாஜி , ஆதவன் எல்லாம் போனோம் . என் நல்ல காலம் இந்தமுறை எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. 50 டாலர் மிச்சம் .( மனைவி திட்டிளிருந்தும் தப்பித்தேன் )


விஜய் படங்களில் நான் கடைசியாக முழு படமும் பார்த்தது கில்லி தான் .முதல் இரண்டு சீனோடு ATM முடித்து விட்டேன். பாதாள சாக்கடையிலிருந்து விஜய் தாவி வருவாரே , அதோடு குருவி முடிந்தது . வில்லு ஞாபகம் இல்லை , இரண்டோ அல்லது மூன்றோ சீன்தான் . வேட்டைக்காரன் பார்க்க போவது இல்லை என்று தீர்மானித்து விட்டேன்.
இவர் படத்தின் கதையை கேட்பாரா இல்லை பஞ்ச் டயலாக் மற்றும் பாடல்களை மட்டும் கேட்பாரா என விளங்கவில்லை .ஒரு பெரிய மாஸ் ஹீரோ இப்படியா வரிசையாக தோல்வி படங்களை கொடுப்பது. (நான் தோல்வி என்பது திரைகதையில் . வசூலில் வேண்டுமானால் வெற்றி என கொள்ளலாம் ) இவரே முழு காரணம் இல்லையானாலும் கணிசமான அளவு இவர்தான் காரணம். அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானதா என்று தெரியவில்லை .பொறுத்திருந்து பார்ப்போம் .

Friday, December 4, 2009

ஆதவன் கதை

மதுரையில் என் தம்பிகள் ஆதவன் பார்க்க போனார்கள் என்று நானும் இங்கு மெல்போர்னில் தமிழ் படம் பாக்க போயிருந்தேன். ( பதிவுகள் பார்த்து விட்டு படம் பார்ப்பதுதான் வழக்கம் ... இந்த முறை அவசரப்பட்டு விட்டேன் . என்னை அந்த கோடம்பாக்கம் ஸ்லிப்பர்கொண்டு விளாச வேண்டும் ) இந்த முறை சிவாஜி படம் போல் கூட்டம் ஒன்றும் இல்லை .சண்டை காட்சிகள் மேலும் வெறுப்பை ஏத்தியது .வேற என்ன செய்ய ...40 டாலர் திக்கெட்டும் ( I mean ticket) பாப்கான் 20 dollor அவுட் . வேட்டைக்காரன் டிசம்பர் மாசம் வருகிறது என்றார்கள் .போதும்டா சாமி .... நான் கேபிள் அண்ணாவைத்தான் விமர்சனத்துக்கு நம்பி இருக்கிறேன். இந்த வருடம் முழுமைக்கும் மொத்தமாக 5 அல்லது அதற்கும் குறைவாகதான் தமிழ் படங்கள் பார்த்திருப்பேன் என்பது வேறு விஷயம் .

கார்கியாரும் ஆலிவ் ஆயிலும்

நேற்று கார்க்கியாரின் பக்கங்களை வாசிக்கும் போது ஆலிவ் ஆயிலின் சிறப்பை குறித்து எழுதி இருந்தார் . அது உண்மை என்றே எனக்கும் தோன்றுகிறது . கடந்த மூன்று வருடங்களாக ஆலிவ் தான் பயன்படுத்துகிறேன் .என்னுடைய blood cholesteral லெவல் நார்மல் ஆகி விட்டது .( முன்னால் எவ்வளவு இருந்தது என்பது வேறு மேட்டர் .)இங்கே 70 வயதில் யாரும் இறந்தால் ரொம்ப சின்ன வயசில புட்டுகிட்டார் என்பார்கள் . எல்லோரும் ஆலிவ் ஆயில் வாங்குவதை ஷாப்பிங் செல்லுன் போதும் பார்த்து உள்ளேன் specially migrants from european countries. ஆனால் 35 வயசில் எனக்கு வேற எதாவது வியாதி வந்தால் .... விதியை வெல்ல யாரால் முடியும் .